கொலை மிரட்டல் வந்ததால் ஐதராபாத்தில் இருக்கிறேன் : நடிகை ராதா!!

266

Radhaசுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ராதா. கடந்த மாதம் திடீர் என போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று திருவல்லிக்கேணியை சேர்ந்த பைசூல் என்பவர் திருமணம் செய்வதாக ஏமாற்றி 4 வருடம் குடும்பம் நடத்தினார் என்றும் தன்னிடம் இருந்து 50 லட்சத்தை ஏமாற்றி வாங்கி விட்டதாகவும் பரபரப்பான புகார் அளித்தார்.

வடபழனி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பைசூலை கைது செய்ய தேடினர். அவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் பைசூலுக்கு எதிரான புகாரை வாபஸ் பெறுவதாக ராதா அறிவித்தார். தங்களுக்குள் சமரசம் ஆகிவிட்டதாகவும் கூறினார். ஆனால் ஒரிரு தினங்களுக்கு பிறகு மீண்டும் போலீசில் புகார் அளித்தார்.

பைசூல் ஆட்கள் தன்னை வீட்டுக்குள் சிறைவைத்ததால் வாபஸ் வாங்குவதாக அறிவித்தேன். இப்போது அவர்கள் பிடியில் இருந்து வந்து விட்டேன் புகாரை வாபஸ் பெற மாட்டேன். பைசூல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

அதன் பிறகு ராதாவை காணவில்லை. அவர் ஐதராபாத் சென்று விட்டதாகவும் அங்கு தலைமறைவாக இருப்பதாகவும் செய்திகள் வந்தன. இது குறித்து ராதாவை போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது..

நான் தலைமறைவானதாக வெளியான செய்தி உண்மை இல்லை. கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தேன். மிரட்டல்களும் வந்த வண்ணம் இருந்தது. எனவே தான் ஐதராபாத் வந்து விட்டேன். என்னை வீட்டு சிறையில் வைத்து மிரட்டியதால் அவர்கள் பிடியில் இருந்து தப்பிக்க புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்தேன்.

பைசூலை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்னிடம் இருந்து வாங்கிய 50 லட்சத்தை வாங்கித் தர வேண்டும். விரைவில் சென்னைக்கு மீண்டும் திரும்பி வருவேன். என்று ராதா கூறினார்.