தன்னை விட 13 வயது மூத்தவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த இளம்பெண் : விசாரணையில் வெளியான உண்மை!!

210

இளம்பெண்

சென்னையில் மா யமான இளம்பெண் தன்னை விட 13 வயது அதிகமான நபரை திருமணம் செய்து கொண்டதோடு அவருடன் சேர்ந்து பண மோ சடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் மோனிகா (26). பொறியாளரான இவர் கடந்த ஜனவரி மாதம் மா யமான நிலையில் அவர் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து பொலிசார் மோனிகாவை தேடி வந்த நிலையில் அவர் ஏற்கனவே திருமணமான புளியந்தோப்பை சேர்ந்த ராஜேஷ் (39) என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டு பெரியபாளையத்தில் வசிப்பதும் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்த பொலிசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது ராஜேஷும், மோனிகாவும் சேர்ந்து ஒன்லைன் வர்த்தகம் மூலம் பலரிடம் இருந்து ரூ 15 லட்சத்துக்கும் மேல் மோ சடியில் ஈடுபட்டதோடு, பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏ மாற்றியதும் தெரிந்தது.

மேலும் இதுதொடர்பாக மோனிகா, ராஜேஷ் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் இருப்பதால் அவர்களை குற்றப்பிரிவு பொலிசார் தேடி வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து பொலிசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.