வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணின் மோசமான செயல் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!!

585

பெண்ணின் மோசமான செயல்..

பிரேசில் நாட்டிலிருந்து கொ க்கைன் உருண்டைகளை விழுங்கிய நிலையில் இலங்கை வந்த பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் ஸ்கேன் சோதனை மேற்கொண்ட போது அவரது வயிற்றில் ஏதோ ஒரு பொருள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. உடனடியாக குறித்த பெண் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன்போது 52 கொ க்கைன் உருண்டைகளை விழுங்கிய நிலையில் இலங்கை வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அகற்றும் நடவடிக்கையினை வைத்தியர்கள் மேற்கொண்டனர். 50 வயதான குறித்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.