வவுனியாவில் பாடசாலை மாணவி மீது பா லியல் வ ன்புண ர்வு : கு ற்றவாளி தலைமறைவு!!

431

பாடசாலை மா ணவி மீது..

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் நேற்றையதினம் (02.10.2019) பாடசாலை மா ணவி ஒருவர் பா லியல் வ ன்புண ர்வுக்குள்ளாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் வசிக்கும் குறித்த பாடசாலை மா ணவியுடன் (வயது 15) அதே பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய நபர் தொலைபேசி மூலம் சில தினங்களாக உரையாடியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த நபர் நேற்றையதினம் காலை 10 மணியளவில் தொலைபேசி மூலம் பாடசாலை மாணவியை கற்குளம் பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதிக்கு வருமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த மா ணவியும் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். இதன் போது பாடசாலை மாணவி மீது குறித்த நபர் பா லியல் து ஸ்பிர யோகம் மேற்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் வீடு திரும்பிய பாடசாலை மாணவி இச்சம்பவம் தொடர்பில் தந்தையிடம் தெரிவித்தமையினையடுத்து, தந்தை மாணவியுடன் வவுனியா பொலிஸார் நிலையத்திற்கு வருகைதந்து இவ்விடயம் தொடர்பில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர் தலைமறைவானதை அடுத்தது அவரை கைது செய்யும் நடவடிக்கையில் வவுனியா பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.