சிறுமி க டத்தப்பட்டு து ஸ்பிரயோகம் : இலங்கை தமிழர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை!!

483

10 ஆண்டுகள் சிறை

சி றுமியை க டத்தி, பா லியல் ப லாத்காரம் செய்த வழக்கில், இலங்கை தமிழர் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதுக்கோட்டை, அறந்தாங்கி அருகே, அழியா நிலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குறித்த நபர், 2016ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுமியை, திருமயம் பகுதிக்கு கடத்திச் சென்று, பா லியல் ப லாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் போக்சோ சட்டத்தில் சந்தேகநபரை கைது செய்தனர்.

இது குறித்து வழக்கு, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது, வழக்கினை விசாரணை செய்தி நீதிபதி ராஜலட்சுமி, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்தார்.

அபராத தொகையினை செலுத்த தவறியதால், மேலும், மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.