தூங்கும் கணவனை அழுது தொ ந்தரவு செய்த குழந்தை : இந்திய வம்சாவளிப்பெண் செய்த மோசமான செயல்!!

297

பெண் செய்த மோ சமான செயல்

இரவுப்பணி முடித்துவிட்டு வந்து தூங்கிய கணவனை அழுது தொ ந்தரவு செய்ததாக ஒரு வம்சாவளிப்பெண் தனது ஆறு மாத குழந்தையை பிடித்து உ லுக்கியதில் அந்த குழந்தை ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளது.

Aylesburyயில் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி, தனது மனைவியாகிய Ravinder Deol (35) தன்னை தொலைபேசியில் அழைத்ததாக தெரிவித்த அவரது கணவர், தான் வீடு வந்து பார்க்கும்போது தங்கள் குழந்தை Ravneet கண்கள் மேலே சொ ருகிய நிலையில் உடல் நிறம் மாறி இருப்பதையும், தன் மனைவி குழந்தையை அணைத்து வைத்திருப்பதைக் கண்டு ஏதோ பிரச்னை என்று எண்ணி ஆம்புலன்சை அழைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

மருத்துவ உதவிக் குழுவினர் வந்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவளை காப்பாற்ற முடியவில்லை. ஆனால், Ravinder Deolஇன் கணவர் கூறியதற்கு மாறாக உடற்கூறு பரிசோதனையின் முடிவுகள் வேறொரு தகவலைக் கூறின.

அதாவது குழந்தையின் தலையின் இருபக்கங்களிலும் தா க்கியதால் ஏற்பட்ட கா யங்கள் இருந்ததாகவும், குழந்தையை ப யங்கரமாக உ லுக்கியதால் அதன் மூளை, தண்டு வடம் எல்லாம் பா திக்கப்பட்டு, குழந்தைக்கு சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் குழந்தை உ யிரிழந்ததாக உடற்கூறு பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன.

அப்போதும் குழந்தை மூச்சு பே ச்சின்றி கிடந்ததாகவும், அதை சரி செய்வதற்காகத்தான் தான் குழந்தையை உ லுக்கியதாகவும் தெரிவித்தார் Ravinder Deol. குழந்தையின் உ யிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக Ravinder Deolஐக் கைது செய்த பொலிசார், பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 2ஆம் திகதிதான் குழந்தையின் ம ரணம் தொடர்பான மருத்துவர்களின் கருத்துக்கள் கிடைக்கப்பெற, செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டார் Ravinder Deol.

இதற்கிடையில் நேற்று நீதிபதி முன்பு, Ravinder Deolஇன் கணவர் இரவு ஷிஃப்டில் இருந்ததாகவும், தொடர்ந்து அவரை சில நாட்களாக துங்கவிடாமல் குழந்தை தொ ந்தரவு செய்ததாகவும், அதனால்தான் தான் Ravinder Deol குழந்தையை உ லுக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது என்னும் விடயம் வாதத்தில் முன்வைக்கப்பட்டது. எனவே குழந்தையை உ லுக்கியது அதற்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்காது என்றும் வேறு காரணங்களால் குழந்தை உயி ரிழந்திருக்கலாம் என்றும் வாதிடப்பட்டது. தன் மீதான கொ லைக் கு ற்றத்தை Ravinder Deol மறுத்துள்ள நிலையில் வழக்கு தொடர்கிறது.