கடந்த ஆகஸ்ட் 04ஆம் திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள் நேற்று 06.10.2019 வெளியாகியுள்ள நிலையில் வவுனியா விபுலாநந்தா கல்லூரியைச் சேர்ந்த மாணவன் செல்வன் .கஜேந்திரன் யஸ்வித் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளதுடன் பாடசாலை மட்டத்தில் முதலிடத்தையும் பெற்று பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார் .
புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் வவுனியா நெற் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.