வவுனியாவில் தனியார் கல்வி நிலையம் செல்லாமல் முதலிடம் பெற்று சாதித்த மாணவி!!

475

விவேகானந்தராசா தரணியா

தனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நான் வவுனியா, கிடாச்சூரியில் வசிக்கிறேன். நான் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றேன். இம்முறை நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளேன்.

நான் இந்த நிலையை அடைய வழிகாட்டிய எமது பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றி கூறுக்கின்றேன்.

நான் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லாது, பாடசாலை கல்வியை மட்டும் நம்பியே படித்து இந்த நிலையை அடைந்துள்ளேன். எதிர்காலத்தில் மாவட்டத்தில் சிறந்த வைத்தியராக வந்து மக்களுக்கு சேவையாற்றுவதே எனது இலக்கு எனத் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய 56 மாணவர்களில் 32 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.