வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில்..
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் ஆரம்பப்பிரிவு அதிபர் ஞானமதி மோகனதாஸ் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்..
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் தரம் 5 மாணவர்களின் சித்தி வீதம் 8 வீதத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 30 வீதமாக காணப்பட்ட சித்தி வீகிதமானது 38 வீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த வருட அனுபவத்தினை கொண்டு நாங்கள் சில திட்டமிட்ட ரீதியான செயற்பாடுகளை எங்களுடைய ஆசிரியர் குழாம் அற்பணிப்புடன் ஆற்றியதன் விளைவாக இந்த வெற்றிக்கனியானது எங்களுக்கு கிடைத்திருக்கின்றது.
அந்த வகையில் எமது மாணவ செல்வங்களை பாராட்டுகின்றேன். அவர்கள் ஆசிரியர்களோடு ஒத்துழைத்து அவர்களினால் கற்பிக்கப்படும் அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் கற்கு இந்த வெற்றிக்கனியினை பறித்துள்ளனர்.
அதற்காக அந்த மாணவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் பாராட்டி நிற்கின்றேன். அந்த வகையில் 2019ம் ஆண்டு எங்களுடைய பாடசாலையில் 195 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றி அவர்களில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அத்துடன் 70க்கும் வெட்டுப்புள்ளிக்கும் இடையில் 110 மாணவர்களும் , 70க்கு கீழ் 10 மாணவர்களும் பெறுபெற்றினை பெற்றுள்ளனர்.
எங்களுடைய பாடசாலை மாணவர்கள் மிக திறமையானவர்கள். பல்வேறு வகையான திறமைகளை கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களான பா.லெக்ஸ் , கி.உதயராஜன், வி.தவராஜன், ம.திலீபன், கோ.ஸ்ரீதரன் மற்றும் பகுதி தலைவர் ஜெ.அருள்செல்வம் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.