வவுனியா மதியாமடு வித்தியாலயம் 62 வருட பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக வரலாற்று சாதனை!!

338

வவுனியா வடக்கு வலய பாடசாலையில் ஒன்றான வவுனியா மதியாமடு வித்தியாலயத்தில் 62 வருடகாலப் பாடசாலை வரலாற்றில் 4 மாணவர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளார்கள்.

குறித்த பாடசாலையில் புலமைபரிசில் பரீட்சையில் இதுவே முதல் வரலாற்றுச் சாதனையாகும். இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு 16 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இவர்களில் சிவகுமார் ஜிபிகா -179 புள்ளிகளையும் சிறிஸ்கந்தராசா சாம்பவி -168 புள்ளிகளையும் தர்மகுலசிங்கம் டிலக்சிகா 165 புள்ளிகளையும் விமலதாஸ் திவ்யா – 159 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அத்துடன் ஏனைய மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பேறுபெற்றினை பெற்றுள்ளனர்.

இச் சாதனையினை நிலைநாட்டுவதற்கு உறுதுணையாகவிருந்த பாடசாலை அதிபர் சி.சிவராசா மற்றும் ஆசிரியர்களான கிரிசாந்தினி சந்திரன் அவர்களுக்கு பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துள்ளது.