வவுனியா செட்டிகுளம்-சின்னசிப்பிக்குளம் பாடசாலை மாணவர்களின் சாதனை!!

468

செட்டிகுளம்-சின்னசிப்பிக்குளம்

கடந்த ஆகஸ்ட் 04ஆம் திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் பெறுபேறுகள் நேற்று 06.10.2019 வெளியாகியுள்ள நிலையில் வவுனியா சின்ன சிப்பிக்குளம் தாருல் உலூம் பாடசாலை மாணவர்கள் நால்வர் மாவட்ட வெட்டுப்புள்ளியான 152 க்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளனர்.

வாரித் அப்ரித் 179, முஹாஜிரீன் ஆயிஷா நதா 169, ஸஹ்ரான் சஹான் 167, உபைதுல்லா நுஹாத் 155 புள்ளிகளை பெற்று சித்திபெற்றுள்ளனர்.

மாணவர்களின் இவ்வெற்றியின் மூலம் செட்டிகுளம் கோட்டமட்ட பாடசாலைகளிடையேயும், வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளிடையேயும் எமது பாடசாலை முதல் நிலை பாடசாலையாக மிளிர்வற்கு அயராது உழைத்த அதிபர், ஆசிரியை திருமதி நஜ்முன்னிசாஜமீன் மற்றும் ஆசிரியர் திரு.நாகூர்கனி றயிஸ் ஆகியோருக்கும், பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

வவுனியா செட்டிக்குள கோட்டமட்ட ரீதியில் தமது பாடசாலை முதலிடம் பெற்றுள்ளது என பாடசாலை அபிவிருத்தி சங்க செய்தியாளர் உவைஸ் முகம்மட்.பாரிஸ் தெரிவித்தார்.