ரயில் தண்டவாளத்தில் குடும்பத்தை காப்பாற்ற முயன்ற நபருக்கு நேர்ந்த கதி!!

411

ரயில் தண்டவாளத்தில்..

திருகோணமலை – மட்கோ பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் இன்று மாலை உ யிரிழந்துள்ளார். குறித்த நபரின் குழந்தையானது ரயில் வீதிக்கு சென்ற போது பிள்ளையை பிடிப்பதற்காக அவரது மனைவி ரயில் தண்டவாளத்துக்கு அருகே சென்றுள்ளார்.

இந்நிலையில் தனது மனைவியையும், மகளையும் காப்பாற்றுவதற்காக குறித்த நபர் ரயில் தண்டவாளத்துக்கு சென்றவேளை ரயில் மோதியுள்ளது. இவ்வாறு உ யிரிழந்தவர் திருகோணமலை – அபயபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய என்.ஜோஹான் ஜோசப் எனத் தெரியவருகின்றது.

உ யிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.