வவுனியாவில் வசதியற்ற மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!!

530

வவுனியா ஓமந்தை புதியவேலர்சின்னக்குளம் பகுதியில் வசித்துவரும் பெண் தலைமைக் குடும்பம் ஒன்றின் மாணவர்களுக்கு பாடசாலையில் கற்றல் நடவடிக்கை மேற்கொள்வதற்காக துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஓமந்தையிலுள்ள சமூக ஆர்வலர் சுரேஷன் நிதிப்பங்களிப்பில் புதிவேலர்சின்னக்குளம் ஆனந்தகுமாரசாமி வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஜெயசீலன் தலைமையில் பாடசாலையில் கல்வி கற்கும் பெண் தலைமைக் குடும்பத்தின் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக துவிச்சக்கரவண்டி ஒன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.