வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வாரத்தில் 7 விமான சேவைகள்!!

291

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு..

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வாரத்துக்கு ஏழு விமான சேவைகளை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக IANS வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 17ம் திகதி நடக்கவுள்ளது. இந்நிலையிலேயே, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்துவதற்கு அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அலையன்ஸ் எயர் நிறுவனம் இலங்கைக்கான சேவைகளை நடத்துவதற்கு, இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, அனுமதி அளித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்புக்கான விமான சேவைகளுக்கு அலையன்ஸ் எயர் நிறுவனம், ATR 72-600 விமானங்களைப் பயன்படுத்தவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.