பேஸ்புக் விருந்து : இளைஞர்கள் அட்டகாசம் : 25 பேர் கைது!!

211

பேஸ்புக் விருந்து

அவிசாவளை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் நடந்த பேஸ்புக் விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் போ தைப்பொருட்களுடன் 25 இளைஞர், யுவதிகளை கைது செய்துள்ளனர்.

பேஸ்புக் மூலம் அறிமுகமான இளைஞர், யுவதிகள் சிலர் அவிசாவளை – தெம்பிலியான பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது 21 இளைஞர்கள் மற்றும் 4 யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 1315 மில்லிகிராம் ஹெ ரோயின், 525 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் க ஞ்சா என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் எம்பிலிப்பிட்டிய, தெய்வோவிட்ட, கொஸ்கொட, கொழும்பு, காலி மற்றும் மாத்தறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று அவிசாவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.