பாரிஸின் பிரபல தேவாலயத்தை வெ டிகுண் டால் தகர்க்க முயன்ற 5 பெண்கள் : நீதிமன்றம் அதிரடி தண்டனை!!

367

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பிரபல தேவாலயத்தை கார் வெ டிகு ண்டு வைத்து தகர்க்க முயன்ற ஐந்து பேர் அடங்கிய பெண் ஐ.எஸ் தீ விரவாத குழுவினருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அ திரடி தண்டனை வழங்கியுள்ளது.

பாரிஸில் உள்ள புகழ்பெற்ற Notre-Dame தேவாலயத்திற்கு வெளியே கார் வெ டிகு ண்டு வைத்து தா க்குதல் நடத்த முயன்ற பெண் தீ விரவாத குழுவினர்களுக்கு ஐந்து முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்தது.

பிரான்சில் தா க்குதல் நடத்த முயற்சிக்கும் பெண்கள் குழு சம்பந்தப்பட்ட முதல் வழக்கு இதுவாகும், நவம்பர் 4, 2016 அன்று தலைநகரின் மையத்தில் உள்ள தேவாலயத்திற்கு முன்நிறுத்தப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் நிரம்பிய கார் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 22 முதல் 42 வயது வரையிலான ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு முக்கிய குற்றவாளிகளான Ines Madani மற்றும் Ornella Gilligmann ஆகியோர் நள்ளிரவில் காரை டீசலுடன் நிரப்பி வெ டிக்க வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர், ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இருவருக்கும் முறையே 30 ஆண்டுகள் மற்றும் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பிரான்ஸ் ஐ.எஸ் ப யங்கரவாதி ரச்சிட் காசிமின் உத்தரவின் பேரில் பெண்கள் செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது, 2016 ஜூன் மாதம் பிரான்ஸ் பொலிஸ் தம்பதியினரை அவர்களது வீட்டில் கொடூரமாக கொ லை செய்ய ரச்சிட் காசிமி உத்தரவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

பிப்ரவரி 2017 ஈராக் நகரமான மொசூல் அருகே நடந்த வான்வழித் தா க்குதலில் காசிம் கொ ல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

பாரிஸ் புறநகரில் தோல்வியடைந்த தா க்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு 22 வயதான Madani கைது செய்யப்பட்டார், மேலும், கைது செய்யப்பட்ட இரண்டு கு ற்றவாளிகளான Sarah Hervouet மற்றும் Amel Sakaou ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Gilligmann தெற்கு பிரான்சில் கைது செய்யப்பட்டார். ஐந்தாவது பெண், Samia Chalel, Madani தப்பிக்க உதவியதாக குற்றம் சாட்டப்பட்டார். அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இணையதளம் மூலம் ஐ.எஸ் இயக்கத்திற்கு பெண்களை நியமிக்கும் முயற்சியில் Madani ஈடுபட்டு வந்ததாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது நடவடிக்கைக்கு வருந்துவதாக Madani நீதிமன்றத்தில் தெரிவித்தார்.