திருகோணமலையில் மண்ணுக்குள் கொட்டிக்கிடக்கும் புதையல் : ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்!!

424

புதையல்

திருகோணமலை, சேருவில பகுதியில் உள்ள இரும்பு, செம்பு கனிமங்கள் இருக்கும் இடத்தில் தங்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அசேல இத்தவல தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேச செயலக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தங்க வளம் இருக்கும் இடத்திற்கு புதிய பொருளாதார பெறுமதியை ஏற்படுத்த தனியார் முதலீட்டாளர்களின் உதவியை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளோம். இலங்கையில் தங்கம் இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.

சேருவில பிரதேசத்தை சூழ இருக்கும் 100 கிலோ மீற்றர் சுற்று வட்டத்தில் சுமார் 5 கிலோ மீற்றர் பரப்பளவில் தங்கம் இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் அசேல இத்தவல குறிப்பிட்டுள்ளார்.