மத்தளையில் தரையிறங்கியது உலகின் 2வது மிகப்பெரிய சரக்கு விமானம்!!

295

சரக்கு விமானம்

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சரக்கு விமானமான Antonov An-124 என்ற விமானம் இன்று ஒன்பதாவது முறையாகவும் மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. துர்க்மினிஸ்தானின் அஷ்கபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த மேற்படி விமானமானது நேற்று காலை 10.07 மணியளவில் மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்நிலையில், குறித்த விமானம் இன்று இரவு 10.15 மணிக்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லேண்ட் விமான நிலையத்தை நோக்கி புறப்படவுள்ளதாகவும் மத்தளை விமான நிலைய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த விமானமானது எரிபொருள் நிரப்புவதற்காகவே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 109,000 லீட்டர் எரிபொருள் விமானத்திற்கு தற்போது நிரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விமானத்தில் இருந்த 19 பணியாளர்களும் தற்போது ஓய்வெடுத்து வருவதாகவும் மத்தளை விமான நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.