இலங்கையில் ஹீரோவாக மாறிய பொலிஸ் அதிகாரி : குவியும் பாராட்டுகள்!!

363

ஹீரோவாக மாறிய பொலிஸ் அதிகாரி

இலங்கையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துணிச்சலான செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் 50 கோடி பெறுமதியான போ தைப் பொருள் மூடையை கண்டுபிடித்து அவற்றை மீட்க வழி செய்துள்ளார்.

அத்துகிரிய பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் பாரிய போ தைப் பொருள் மூட்டைகளை கண்டுபிடித்துள்ளார். அவற்றை பறிமுதல் செய்யாதிருக்க 50 இலட்சம் ரூபா ல ஞ்சம் தருவதாக பேரம் பேசப்பட்டுள்ளது.

எனினும் அதனை நிராகரித்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி, அது குறித்து பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகத்திற்குரிய நபரை பின்தொடர்ந்து போக்குவரத்துக்கடமையை விட்டுச்சென்று அவர் சென்ற ர கசிய வீட்டை தனியாக சென்று கண்காணித்துள்ளார்.

இதன்போது அங்கு பாரிய போ தைப்பொ ருள் மூட்டைகள் அடுக்கு வைத்திருப்பது தொடர்பில் தகவல் வழங்கி, அதன் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

பாரிய தொகைக்கு பேரம் பேசப்பட்ட போதும் அதனை நிராகரித்து நோ்மையான முறையில் தனது கடமைகளை செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அனைத்து தரப்பினராலும் பாராட்டு குவித்து வருகிறது.