இந்தி நடிகர் சல்மான் கான் பல்வேறு நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டவர். 48 வயதான அவர் இது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று அவர் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது திருமணம் பற்றி நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் எனக்கு திருமணத்திலோ அல்லது பெண் தோழிகளை வைத்து கொள்வதிலோ விருப்பம் கிடையாது. நான் தனிமையில் வாழவே விரும்புகிறேன். கடந்த 30 ஆண்டாக தனிமையில் வசித்தே பழகிவிட்டேன். தனிமையை தான் விரும்புகிறேன்.
தனிமையாக வசிப்பதால் செய்ய வேண்டியவற்றை யாருடைய குறுக்கீடும் இல்லாமல் செய்ய முடியும். அதை பற்றி விவரித்து கூற வேண்டியதில்லை. நான் யாரிடமும் பொய் பேச வேண்டிய அவசியமும் இல்லை.
யாராவது என் வாழ்வில் குறுக்கிட விரும்பினால் தாராளமாக வரலாம். ஆனால் எதையும் எதிர்பார்க்காதீர்கள். நான் பெண்களை மதிப்பவன். அவர்கள் மீதான மதிப்பை இனியும் தொடருவேன். நான் ஒருமுறை கூட யாரிடமும் பொய் பேசியதே கிடையாது என்று கூறினார்.