இலங்கை பயனர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

313

முக்கிய அறிவிப்பு

இலங்கையில், பேஸ்புக் பயன்படுத்துனர்களால் inbox ஊடாக பரிமாறப்படும் தகவல்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக, பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் இலங்கைக்கான கொள்கை திட்ட முகாமையாளர் யசாஸ் அபேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசியுள்ள அவர், “பேஸ்புக் நிறுவனம் முதல் முறையாக இலங்கையர் ஒருவரை, இந்தப் பதவிக்கு நியமித்துள்ளதாகவும்” கூறியுள்ளார். இதேவேளை, இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் காலங்களில் போலிச் செய்திகள், மற்றும் இனவாதக் கருத்துக்கள் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், சமூக ஊடகங்களின் மூலம் போலிச் செய்திகள், இனவாதக் கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுப்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு சமூக ஊடக நிறுவனங்களுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.