நண்பியின் புகைப்படத்தை ஆ பாசமாக பேஸ்புக்கில் பதிவிட்ட இளம் பெண்!!

299


பேஸ்புக்கில்



பியகம பிரதேசத்தில் தனது நண்பியை அவமதிப்பதற்காக போலி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண் தனது நண்பியின் புகைப்படங்களை ஆ பாசமாக மாற்றம் செய்து அவற்றினை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.



பா லியல் ரீதியில் விருப்பம் உள்ளவர்கள் அவரை அழைக்குமாறு தொலைபேசி இலக்கத்தையும் பதிவிட்டுள்ளார். சந்தே நபரான பெண் கடந்த 18ஆம் திகதி மாலை பொலிஸாரால் கைது செய்யயப்பட்டுள்ளார்.




மேலும் அந்த பெண்ணின் போலி பேஸ்புக் கணக்கை பயன்படுத்திய தொலைபேசியையும் பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சந்தேக நபரான பெண் ஆகிய இருவரும் பியகம பிரதேசத்தில் உள்ள நிறுவனத்தில் தொழில் செய்கின்றார். தொழில் ரீதியாக இருவருக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவ்வாறு புகைப்படங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபரான பெண் 26 வயதுடையவர் எனவும் பாதிக்கப்பட்ட பெண் 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும் பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.