புத்தளத்தில் கோர விபத்து : சிறுமி உட்பட மூவர் ப லி!!

608

கோர விபத்து

அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட மூவர் உ.யிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸாார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் சிரம்பியடி பொலிஸ் விஷேட அதிரடிப் படை முகாம் அமைந்துள்ள 4 ஆம் கட்டையில் அதிகாலை 12.20 மணிக்கு வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த வானில் 11 பேர் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்தின் போது 4 வயது சிறுமி உட்பட மூவர் உ யிரிழந்துள்ளனர். மடு தேவாலயத்துக்கு சென்று திரும்பிய வேளையே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போதே மூவர் உ யிரிழந்த நிலையில் ஏனைய 8 பேருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அந்த 8 பேரில் இருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாகவும் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நான்கு வயது சிறுமியான சத்துகி தினுஷா மற்றும் அவரது தயாரான 30 வயதுடைய அருணி மதுஷங்க மற்றும் 26 வயதான களுத்துறையைச் சேர்ந்த தினுக ஜயநாத் டயஸ் என்ற வேனின் சாரதியுமே இவ்வாறு உ யிரிழந்துள்ளனர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.