நெகிழ்ச்சியான செயல்

தமிழகத்தின் திருச்சியில் ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்து உ யிரிழந்த இரண்டு வயது சிறுவனின் மரணம் உலக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா மாத்திரமன்றி இலங்கையிலும் பல்வேறு பகுதிகளில் சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் சுர்ஜித் உ யிரிழப்பை அடுத்து தென்னிலங்கையிலுள்ள சிங்கள குடும்பம் ஒன்று அஞ்சலி செலுத்தியுள்ளது.

இனவாத ரீதியாக செயற்பட்டு வரும் சிங்கள மக்களுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் உ யிரிழந்த சிறுவனுக்காக அஞ்சலி செலுத்தியமை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த 25ஆம் திகதி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த சுர்ஜித் 4 நாட்களின் பின்னர் ச டலமாக மீட்கப்பட்டார். நேற்றைய தினம் பி ரேத பரிசோதனையின் பின்னர் அடக்கம் செய்யப்பட்டார்.




