சுர்ஜித் இ றந்த பின் பெற்றோர் செய்த செயல் : கண்கலங்க வைக்கும் ஒற்றை புகைப்படம்!!

216

கண்கலங்க வைக்கும் புகைப்படம்

தமிழகத்தில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ப லியான சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், தற்போது சிறுவனின் பெற்றோர் செய்த செயலின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25ஆம் திகதி மாலை அவரது வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் அங்கிருந்த மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.

இதனால் அந்த குழந்தையை மீட்க கடந்த 4 நாட்களாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் இந்த நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்காத நிலையில், நேற்று முன் தினம் அதிகாலை உ யிரிழந்த நிலையில் மீட்டனர்.

அந்த குழந்தையின் உ டல் அழுகி சிதிலமடைந்திருப்பதால் உடனே பி ரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றிலிருந்து சுர்ஜித்தின் பெற்றோர் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சுர்ஜித் விழுந்து இ றந்த ஆழ்துளை கிணற்றிற்கு மாலை வைத்து, தாய் மற்றும் தந்தை வேதனையுடன் உள்ளனர்.

இதைக் கண்ட இணைவாசிகள் சிலர் வேதனையான கமெண்ட்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் தாய்க்கு தெரியும் தன் மகன் எங்கே புதைக்கப்பாட்டான் என்று குறிப்பிட்டுள்ளார்.