நடிகை ஸ்ருதிஹாசனுக்கு திடீர் சத்திர சிகிச்சை நடந்தது. தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக, மும்பையிலிருந்து சமீபத்தில் ஐதராபாத் வந்தார் ஸ்ருதிஹாசன்.
அங்கு விழா ஒன்றில் பங்கேற்றபோது அவருக்குத் திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை வைத்தியசாலையில் சேர்த்தனர். வைத்தியர்கள் அவரை பரிசோதித்து பார்த்தபோது குடல்வால் நோய் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு சத்திர சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். பின்னர் அவருக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. அவரை 10 நாட்கள் ஓய்வில் இருக்கும்படி வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர் .