தமிழ் மாணவனின் கண்டுபிடிப்பு

மோட்டார் சைக்கிளிள் பயணிக்கும் போது நேரிடும் வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையினை குறைக்கும் வகையில் பாதுகாப்பான தலைக்கவசம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் தரம் 12இல் கணித பிரிவில் கல்வி கற்கும் மாணவன் கிருஷ்ண குமார் முகேஷ் ராம் கண்டுபிடித்துள்ளார். வீதிகளில் பயணம் மேற்கொள்ளும் போது விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இந்த தலைக்கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதை இனங்கண்டு உடனடியாக குறுஞ்செய்தி மூலம் உறவினர்களுக்கோ அல்லது பொலிஸாருக்கோ தெரியப்படுத்துவதினால் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைப்பதற்கு இந்த பாதுகாப்பான தலைக்கவசம் உதவுகிறது.




