நான்கு வயதுச் சிறுமியை வல்லுறவு செய்த கடற்படை வீரருக்கு விளக்கமறியல்!!

354

Jailநான்கு வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட கடற்படை வீரரை நேற்று புதன்கிழமை குச்சவெளி நீதவான் தயான்மிகாகே முன்னிலையில் பொலிஸார் ஆஜர் படுத்தினர்.

சந்தேகநபரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

திருகோணமலை திரியாய் பகுதியில் கடந்த 29.12.2013 ஞாயிற்றுக்கிழமை 4 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட கடற்படை வீரரே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரை எதிர்வரும் 22ம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள், சகோதரர்கள் சாட்சியளித்தனர். இவர்கள் சார்பில் சட்டத்தரணி ஜே.என்.லாகிர் ஆஜராகினார். கடற்படையினர் சார்பில் சட்டத்தரணி சுபாசினி சித்திரவேல் ஆஜராகினார்.