அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் : காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது!!

346

Protestதேசிய அமைப்புகளின் ஒன்றியம் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கொள்ளுபிட்டி தொடக்கம் காலி முகத்திடல் வரையான பிரதான வீதியின் ஒருவழி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் போர் குற்றவிசாரணைக்குப் பொறுப்பான தூதுவர் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.