கண்டியில் மாணவர்கள் பயன்படுத்தும் புதிய போதைப் பொருள் கண்டுபிடிப்பு!!

719

Pothaiஇலங்கையில் இதுவரை பாவனையில் இருந்து கண்டுபிடிக்கப்படாத புதிய வகை போதைப் பொருளை கண்டி பிராந்திய பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

கண்டியில் உள்ள பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பகுதி நேர வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள் இந்த போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தெரியவருகிறது.

ஹெரோயின் அல்லாத இந்த போதைப் பொருள் பாடசாலை மாணவர்கள் மற்றும் சில யுவதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா போதைப் பொருள் கலந்த கோகோ படவுடர் போன்ற வர்ணத்தில் இருந்த போதைப் பொருள் காணப்படுவதாகவும் இது 150 ரூபா முதல் 250 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.