வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைக்கு எ திராக கொ தித்தெழுந்த கா ணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்!!

309

தமிழ் தேசியக் கூட்டமைக்கு எ திராக..

சமஸ்டியை ஒற்றையாட்சிக்குள் சஜித் ஒளித்து வைத்துள்ளார் என்கிறார் சம்மந்தன். பலாப்பழத்திக்குள்ளே மாம்பழ கொட்டை இருக்குது என்று தமிழர்களை முட்டாள் ஆக்க சம்பந்தன் கனவு காணுகிறார் என தெரிவித்து வவுனியாவில் இன்று (10.11.2019) க வனயீர்ப்பு போ ராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 995 ஆவது நாளாக சுழற்சி முறையில் போ ராட்டத்தில் ஈடுபட்டுவரும் கா ணாமல் ஆ க்கப்பட்டோரின் உறவுகளினாலேயே இன்று இக் க வனயீர்ப்பு போ ராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

995 ஆவது நாளாக சுழற்சி முறையில் போ ராட்டத்தில் ஈடுபடும் போ ராட்ட தளத்திற்கு முன்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு,

2009க்கு முன்பு தமிழ்ப் புலிகளை அ ழிக்க சிங்களத்திற்கு உதவிய சம்பந்தன் இப்போது “புலிகளை மௌனிக்கச் செய்ததால் எம்மை ஏமாற்றலாம் என நினைக்கின்றனர்” என புலுடா விடுகிறார்.

பாதிரியார் இம்மானுவேல் சர்வதேச அரங்கில் தமிழர்களை பலவீனப்படுத்தி இப்போது தாயகத்தில் மாமனிதர் ரவிராஜின் நினைவு தினத்திற்கு தலைமைதாங்க தகுதி அற்றவர் போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது கா ணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மறைந்த யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு அவரின் படத்திற்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றியதுடன் மலர் அஞ்சலியும் செய்யப்பட்டது.