புதியதோர் மனித இனம் உருவாகியுள்ளது : சி.வி. விக்கினேஸ்வரன்!!

372

CV

இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள், மற்றும் உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா, என்று தெரியாத நிலையில் காணாமல் போனோர் என்றதொரு புதிய மனித இனம் தோன்றியுள்ளது.

இதற்கு இடம் கொடுக்காது இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் எங்களுக்கு இதற்குரிய பதிலை தந்தாக வேண்டும் என்று தெரிவித்தார் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன்.

வடமாகாண சபையின் அமர்வு நேற்று(09) காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. இந்த அமர்வின்போது, 12 பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றுள் 10 பிரேரனைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இரு பிரேரணைகள் தோல்வியடைந்தன.

இந்த பிரேரணைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமல்லாது உறவினர்களால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக பொறுப்புக் கூறவேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருப்பதாகத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் முகமாகவே முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்திருந்தார். மேலும் வடமாகாண சபையின் அமர்வு எதிர்வரும் 27 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.