தன் அழகான கூந்தலை மொட்டையடித்த பெண் போலிஸ் அதிகாரி : காரணம் தெரிந்தால் அசந்து போவீர்கள்!!

580


பெண் போலிஸ் அதிகாரி



கேரள மாநிலத்தில் பெண் பொலிஸ் ஒருவர் பு ற்றுநோ யால் பா திக்கப்பட்டவர்களுக்கு தனது முடியை மொட்டை அடித்து தானமாக கொடுத்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.



பெண்களைப் பொறுத்தவரை தலைமுடி என்பது எத்தனை முக்கியம் என்பதை சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. அதுதான் இந்தியப்பெண்களின் அழகாக கூட பல இடங்களில் வர்ணிக்கப்படுகிறது.




அந்தளவிற்கு பெண்கள் தங்கள் அழகின் அடையாளமாக கருதும் கூந்தலை முழுவதுமாக மொட்டையடித்து தானமாக தந்துள்ளார் ஒரு பெண் போலிஸ் அதிகாரி.


கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 44 வயது பெண் போலிஸ் அதிகாரி அபர்ணா. இவர் தன் முடியை தானமாக கொடுத்தது கேன்சர் நோயாளிகளுக்காகத்தான்.

ஆம் கேன்சர் நோயின் கொடூரத்தை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. நம்மை உருக்கி எடுக்கும் இந்த வியாதியை குணப்படுத்த கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் எடுக்கும்போது அவர்களின் முடி முழுவதுமாக கொட்டிவிடும் வாய்ப்புள்ளது.


இதனால் அவர்கள் விக் வைத்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவர்களுக்காக பலரும் தங்கள் முடியை தானம் கொடுப்பது வழக்கமாகும்.

இந்நிலையில், பொலிஸ் அதிகாரியான அபர்ணா மொத்தமாக மொட்டையடித்து தானம் செய்துள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.