இலங்கையில் பிறந்த அமெரிக்கப் பிரஜை சவுதியில் விடுதலை!!

409

Dubai American Arrestedசவுதி அரேபியாவின் சட்டத்திட்டங்களை மீறும் வகையிலான காணொளி ஒன்றை தயாரித்தமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் குடியுரிமையை கொண்ட இலங்கை பிரஜை ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஷெசன்னி காசிம் (Shezanne Cassim) என்ற 29 வயதாக இளைஞன், அந்த நாட்டின் இளைஞர்களின் வாழ்வை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருந்த இந்த காணொளி, யுடியுப் தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து அவர் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

அந்த நாட்டு நீதிமன்றம் அவருக்கு 2 ஆயிரத்து 725 டொலர்கள் அபராதம் விதித்ததுடன் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்திருந்தது.

பின்னர் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் தலையீட்டின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டு, விரைவில் நாடு திரும்பவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தாம் தாயரித்த காணொளி சவுதியின் சட்டத்திடங்களுக்கு முரணானது இல்லை என்று அவர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.