கணவரை கொ லை செய்த மனைவி கைது!!

299

மனைவி கைது

வாழைச்சேனை – கருணைபுரம் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட குடும்பத் த கராறு காரணமாக கணவர் உ யிரிழந்துள்ளதுடன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை, கருணைபுரம் 3ஆம் குறுக்கு வீதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கூலித் தொழிலாளி மாரித்து சுரேஸ்குமார் (வயது 36) என்பவரே இதன்போது உ யிரிழந்துள்ளார்.

இதேவேளை உ யிரிழந்தவரின் மகனான சுரேஸ்குமார் கிதுர்ஷன் (வயது 16) என்பவர் காயமடைந்த நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்த கராறு காரணமாக ஏற்பட்ட ச ண்டையில் மனைவி மற்றும் மகன் சேர்ந்து இவரை வெ ட்டி கொ லை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உ யிரிழந்தவரின் உ டல் வெ ட்டப்பட்டு குறித்த நபரின் வீட்டிற்கு முன்பாகவுள்ள வீதியில் வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதையடுத்து பொதுமக்கள் 1990 இலவச சேவை அம்பூலன்ஸ் மூலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உ யிரிழந்தவரின் மனைவியான கனகரெட்ணம் கண்மணி (வயது 35) என்பவரை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.