யாழ்.மாவட்டம் நல்லூர் தொகுதியின் இறுதி முடிவுகள்!!

217

யாழ்.மாவட்டம் – நல்லூர் தொகுதி

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான நல்லூர் தொகுதிகளுக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

இதன்படி கோத்தபாய ராஜபக்ச 1,836 , சஜித் பிரேமதாச 27,605, அநுரகுமார திசாநாயக்க 166, சிவாஜிலிங்கம், 659 வாக்குகளையும், ஹிஸ்புல்லாஹ் 24 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 46,888, செல்லுபடியான வாக்குள் 32,093, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 32941, நிராகரிக்கப்பட்டவை 848.

நாளை ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை மறுநாள் திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.