இதுவரை வெளியான முடிவுகளின்படி கோத்தபாய ராஜபக்ச 52 வீத வாக்குகளுடன் முன்னிலை!!

346


கோத்தபாய ராஜபக்ச முன்னிலை



இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அ சம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.



இந்நிலையில் இதுவரை (அதிகாலை 4.30 மணி) பெரும்பாலான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளிவந்துள்ளன. வெளியான முடிவுகளின்படி கோத்தபாய ராஜபக்ச 252,269( 52.87%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். சஜித் பிரேமதாச 189,275 (39.67%) வாக்குகளையும், அநுரகுமார 22356(4.69%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.




நாளை ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் நிலையில் நாளை மறுநாள் திங்கட்கிழமை முழுமையான முடிவுகளோடு யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.