யாழ். பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை!!

210

யாழ். பருத்தித்துறை தேர்தல் தொகுதி

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது யாழ். மாவட்ட பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான யாழ்ப்பாணம் தொகுதிகளுக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. யாழ்ப்பாணம் மாவட்ட பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.

அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 19,931 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 1,848 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 644 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.