இதுவரை வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 51 வீத வாக்குகளுடன் முன்னிலை!!

228

சஜித் பிரேமதாச முன்னிலை

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இதுவரை (காலை 7.00 மணி) பெரும்பாலான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளிவந்துள்ளன.

வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 691,998 (51.56%) வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 549,151( 40.92%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். அநுரகுமார 43306(3.32%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில் இதுவரை வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 80 விகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.