என் தாயின் இ றப்பிற்கு நான் காரணம் இல்லை ஆனாலும்… கடினங்கள் தாண்டி வெற்றிபெற்ற பெண்ணின் கதை!!

432

பெண்ணின் கதை

மும்பையை சேர்ந்த நட்டாஷா என்ற பெண் தன் வாழ்வில் அனுபவித்த துன்பங்கள் குறித்து ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பகிர்ந்துள்ளார். தற்போது யோகா ஆசிரியாராக இருக்கும் நட்டாஷா. நடனம், ஊக்கமூட்டும் பேச்சாளர், என்று பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகிறார்.

இவர் தற்போது அனைவருக்கும் வெற்றியாளராக அறிமுகமானாலும் அவரது வாழ்க்கை சிறுவயதில், அவ்வளவு சிறப்பானதாக இல்லை. நட்டாஷாவின் 3வயதில், அவரது தாய் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். அதுவும், நட்டாஷாவின் கண்முன்னே தன்னைதானே தீ வை த்து எ ரித்து கொண்டுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள நட்டாஷா, ”எனது அம்மா த ற்கொ லை செய்துகொண்டார். தீயில் க ருகி உ யிரிழந்ததை என் கண்களால் பார்த்தேன். அந்தச் சம்பவம் என் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது.

அந்தக் காட்சிகள் எப்போதும் என கண்களைவிட்டு மறையாது. அந்த நினைவுகளை அ ழிக்க நினைத்தால், கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். என் தாயின் ம ரணத்துக்கு நான் காரணம் இல்லை என்பது எனக்குத் தெரியும்.

என்னால் அவரைக் காப்பாற்ற முடியாது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், அதற்கான முயற்சியை நான் எடுக்கவில்லை. என் தாயின் ம ரணத்துக்கு என்னை நானே கு ற்றம் சுமத்திக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதன்பின், நட்டாஷாவின் வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. 7வயதில் ஒருவரால் பா லியல் வ ன்கொடு மைக்கு ஆளாகியுள்ளார். அதன்பின் 15வயது வரை உறவினர்கள் பலரும் பா லியல் ரீதியாக து ன்புறு த்தியுள்ளனர்.

அந்நாட்களில், உலகமே தன்னை வெ றுப்பதாக நட்டாஷா நினைத்து கொண்டுள்ளார். தன்மீதே தனக்கு வெ றுப்புணர்வு ஏற்பட்டு யாரையும் நம்ப அவர் தயாராகவும் இல்லை என்று பகிர்ந்துள்ளார்.

நடனம் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், 17 வயதில் அதில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட வி பத்தால் சில வாரங்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், அவர் நடனமாடச் சென்றார். ஏனென்றால், ஓய்வு என்பதை வெ றுப்பை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் எவ்வளவு கா யங்கள் ஏற்பட்டாலும் ஒருபோது நட்டாஷா நம்பிக்கையை மட்டு இழக்கவில்லை. தன்னை மா ய்த்துக்கொள்வதாலோ கா யப்படுத்தி கொள்வதாலோ எந்த தீர்வும் கிடைக்கபோவதில்லை என்பதில் தெளிவாக இருந்துள்ளார்.

இப்படி ஏற்பட்ட கா யங்களுக்கு அவரே தேடிய மருந்து யோகா. அது நட்டாஷாவின் வாழ்வை மாற்றியுள்ளது. தற்போது பல கலைகளின் சொந்தகாரியாக வலம்வருகிறார் நட்டாஷா.