பிரான்ஸில் பாலம் இடிந்து விழுந்து ப யங்கர விபத்து!!

568

தென்மேற்கு பிரான்சில் டார்ன் ஆற்றின் மீதிருந்த தொங்கு பாலம் இ டிந்து வி ழுந்ததில் 15 வயது சிறுவன் ப லியானார் மற்றும் பலர் கா யமடைந்துள்ளனர்.

துலூஸின் வடக்கே மிர்பாயிக்ஸில் உள்ள பாலம் திங்கள்கிழமை காலை 8 மணியளவில் இ டிந்ததில் ஒரு காரும் லொறியும் கீழே விழுந்து ஆற்றில் மூ ழ்கியது.

இந்த காரில் 15 வயது சிறுவன் மற்றும் அவரது பெற்றோர் இருந்தனர். விபத்தில் சிறுவன் சம்பவ இடத்தில் இ றந்தார் மற்றும் ஏழு பேர் கா யமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பாலம் மிர்பாயிக்ஸ்-சுர்-டார்ன் மற்றும் பெஸ்ஸியர்ஸ் நகரங்களை இணைக்கிறது.பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் மூன்று வாகனங்கள் சிக்கியதாக உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

60 க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்தில் மீ ட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், பாலத்தின் நிலை குறித்து வி சாரணை மேற்கொள்ளப்படும் என்றும் உள்ளுர் அதிகாரி தெரிவித்துள்ளார்

பொதுமக்களை அப்பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர், மேலும் முன்னெச்சரிக்கையாக அருகிலுள்ள வில்லெமூர் தொங்கு பாலமும் மூடப்பட்டுள்ளது.