ஜனாதிபதியின் வாகனம் செல்கையில் எந்த வீதியையும் மூடக்கூடாது : தொடரும் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவுகள்!!

435

கோட்டாபய ராஜபக்‌ஷ

அரச நிறுவனங்களில் எந்தவொரு அரச தலைவர்களின் புகைப்படங்களையும் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது மற்றுமொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

அதன் அடிப்படையில் ஜனாதிபதியின் வாகனம் செல்லும்போது எந்தவொரு வீதியையும் மூடக் கூடாதென உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதியின் வாகனத் தொடரணியில் பா துகாப்பு வாகனங்கள் இரண்டு அல்லது மூன்றுக்கு மேலே செல்லக் கூடாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி பணிக்குழாமில் உள்ள ஊழியர்கள் 2500 பேரிலிருந்து 250 பேர் வரை குறைக்கப்படவுள்ளதாகவும், ஊழியர்களின் வாகன மற்றும் இதர சலுகைகளிலும் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.