பேஸ்புக் பக்கங்களுக்கு ஆபத்து : இலங்கை தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை!!

428

பேஸ்புக் பக்கங்களுக்கு ஆபத்து

இலங்கையில் நடத்திச் செல்லப்படும் பேஸ்புக் பக்கங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேஸ்புக் பக்கங்களுக்கு இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இன்னமும் தேடி வருவதாக சங்கத்தின் தலைவர் யசிரு குருவிட்டகே தெரிவித்துள்ளார். அதற்கமைய இதுவரையில் பயன்பாட்டிலுள்ள அனைத்து பேஸ்புக் பக்கங்களுக்கும் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பேஸ்புக் பக்கங்களும் unpublish ஆக வாய்ப்புகள் உள்ளதாக பேஸ்புக் பக்கங்களுக்கு தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.