கு ற்றம் சாட்டுபவர்களுக்கு எ திராக கடும் நடவடிக்கை : ரணில் எச்சரிக்கை!!

304

ரணில் எச்சரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்துகொண்டு கட்சியின் மீது கு ற்றம் சுமத்துபவர்கள் மீது விசாரணை நடாத்தி க டும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலையகமான சிறிகொத்தாவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை நேற்று சந்தித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“எமது தரப்பின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நான் பரிந்துரைத்தேன். ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது, அதற்குரிய பணிகளை கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவும், அதனைச் சார்ந்த கட்டமைப்பும் சரிவர மேற்கொண்டது என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

பிரசாரப் பணிகளுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை என்று முன்வைக்கப்படும் கு ற்றச்சாட்டுக்களை நான் முற்றாக நி ராகரிக்கின்றேன். அதற்கு நானோ அல்லது கட்சித்தலைமையகக் கட்டமைப்போ பொறுப்பல்ல.

நாம் எமது அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒவ்வொரு பொறுப்புக்களை வழங்கினோம். நிதி நடவடிக்கைகளை நாம் பொறுப்பேற்க வில்லை. அந்த கு ற்றச்சாட்டையும் நான் நிராகரிக்கின்றேன்.

எவ்வாறாயினும், துரதிஷ்டவசமாக தெற்கில் எமக்கான வாக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. அது ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. சில மாவட்டங்களை எம்மால் வெற்றிகொள்ள முடிந்தது.

எனினும், தேசிய ரீதியாக நோக்கும்போது நாம் தோல்வியடைய நேர்ந்தது. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய்வொன்றையும் மேற்கொள்ள வேண்டும். அதனூடாகவே எம்மால் முன்நோக்கிச் செல்லமுடியும்.

அத்தோடு கட்சியின் தலைவர்கள் எவரும் பிரசாரத்திற்கான நிதிமூலம் தொடர்பான பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அதுகுறித்த கு ற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றேன்.

ஆகவே கட்சி என்ற வகையில் கு ற்றச்சாட்டுக்கள் பற்றி ஆராய்ந்து, அவை உண்மைக்குப் புறம்பானவையாக இருப்பின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. மேலும் இத்தருணத்தில் கட்சியின் எதிர்காலம் குறித்து சிந்திப்பதுடன், புதிய தலைவர்களையும் நியமிக்க வேண்டியுள்ளது.

தேர்தல் முடிவுகள் பற்றிய ஆராய்வின் ஊடாக புதிய கொள்கைகளை அவர்கள் முன்வைக்கவேண்டும். அதனூடாக எவ்வித அச்சமுமின்றி ஒன்றிணைந்aது பயணிப்பதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைக்கும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.