ரணிலுக்கு எ திராக இராணுவ வீரர் உண்ணாவிரதம்!!

299

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை சஜித் பிரேமதாசிவிற்கு வழங்கக் கோரி முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உண்ணாவிரத போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இராணுவத்தில் சேவையாற்றிய ஊனமுற்ற வீரர் ஒருவரே இவ்வாறு உண்ணாவிரத போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சஜித் பிரேமதாசவிற்கு கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஒருவர் உ ண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் கட்சித் தலைவர் பதவியில் இருப்பதாலேயே ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் தோல்வியை சந்திப்பதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாக ஐக்கிய தேசியக் கட்சிளை உடன் மறுசீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையிலேயே, கட்சியின் தலைமைப் பதவி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதுடன், ரணில் விக்ரமசிங்க தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.