யாழ்.மேல் நீதிமன்றால் 1000 கிலோ கேரள க ஞ்சா தீயிட்டு அ ழிப்பு!!

334

யாழ்.மேல் நீதிமன்றால்..

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரள க ஞ்சா போ தைப்பொருள் எ ரித்து அழிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையாகவுள்ள வெற்றுக் காணியில் இந்த சான்றுப்பொருள் எரித்து அழிக்கும் பணி இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த ஒரு வருடத்துக்குள் இடம்பெற்று முடிந்த க ஞ்சா போ தைப்பொருள் கு ற்றத்துகான 20 வழக்குகளின் சான்றுப்பொருள்களை எரித்து அழிக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில், அவற்றை எரித்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேல் நீதிமன்ற பதிவாளர் மீரா வடிவேற்கரசன் முன்னெடுத்தார். இதேவேளை, கடந்த மூன்று வருடங்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2 ஆயிரத்து 500 கிலோக் கிராமுக்கு அதிகமான க ஞ்சா போ தைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.