யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக நேற்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அத்துடன் யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் நடைபெற்ற இராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அவர் ஏற்றுக்கொண்டார். கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் மரக்கன்றொன்றையும் அவர் நாட்டிவைத்தார்.