க.பொ.த.சாதாரண பரீட்சையை முன்னிட்டு பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

288

முக்கிய அறிவிப்பு

க.பொ.த சாதாரணதர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்குகள், பகுதி நேர வகுப்புகள் என்பவற்றை நடத்த எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை 4987 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். மேலும் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் எட்டும் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.