கடும் குளிர், இரவு தூங்கியிருப்பானா தெரியவில்லை : வெளிநாட்டில் மா யமான சிறுவன் தொடர்பில் தாயார் க ண்ணீர்!!

306

தாயார் க ண்ணீர்

ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மாகாணத்தில் மா யமான சிறுவன் தொடர்பில் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ஷார்ஜா மாகாணத்தில் குடியிருந்து வருபவர்கள் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் ராஜன் மற்றும் பிந்து சந்தோஷ் தம்பதி.

இவர்களின் அமேயா சந்தோஷ் என்ற 15 வயது மகனே கடந்த வெள்ளிக்கிழமை முதல் கா ணவில்லை என மாகாண பொலிசார் தே டி வருகின்றனர். ஷார்ஜாவில் உள்ள பாடசாலை ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்துவரும் அமேயா, தேர்வு கண்டு அஞ்சி மா யமானதாகவும் தகவல் பரப்பப்படுகிறது.

ஆனால், கல்வி தொடர்பில் தாங்கள் எந்த அ ழுத்தமும் அமேயாவுக்கு தந்ததில்லை என பெற்றோர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர். வெள்ளியன்று பகல், கல்வி மையத்தின் அருகே அமேயாவை விட்டுவிட்டு வந்ததாகவும், ஆனால், அதன் பின்னர் அமேயா அந்த கல்வி மையத்தின் உள்ளே சென்றதில்லை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமேயாவிடம் காசு எதுவும் இல்லை எனவும், அவரது மொபைல் போன் தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளது எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது குளிர் காலம் என்பதால் இரவு அமேயா எங்கே படுத்துறங்குவான் என கேட்டு, தாயார் க ண்ணீர் வடித்துள்ளார்.

அமேயா இதுவரை பெற்றோரையோ, நண்பர்களையோ தொடர்புகொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி அமேயா பொதுவாக யாருடனும் பழகுவதில்லை எனவும், உதவி கேட்டு யாரையும் நாடும் குணம் கொண்டவர் அல்ல எனவும் பெற்றோர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மா யமான சிறுவன் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் ஷார்ஜா மாகாண பொலிசார். சி றுவன் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை நாடவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.