கடலில் தவறி விழுந்த இளைஞன்..

மன்னார், தாழ்வுபாடு கடற்கரைக்கு மீன் பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் கடலில் விழுந்து உ யிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் சக மீனவருடன் இன்று காலை தாழ்வுபாடு கடலில் கண்ணாடி இழை படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

குறித்த படகினை ஓட்டிச் சென்ற அந்த இளைஞன் படகில் இருந்து திடீரென கடலில் வீழ்ந்துள்ளார். இதையடுத்து விரைந்து செயற்பட்ட சக மீனவர்கள் கடலில் அவரை தேடிய போது உ யிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

உ யிரிழந்தவர் மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய எஸ்.பெப்சிகர் பீரிஸ் என்பவர் எனத் தெரியவருகின்றது. குறித்த இளைஞனின் ச டலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




